ADDED : ஏப் 20, 2016 02:04 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* காலம் பணவிலை உடையது. பயனுள்ள விதத்தில் நேரத்தை செலவிடுங்கள்.
* அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவது இல்லை என்னும் பூரண நிலை அடைந்து விட்டால் அவனே கடவுள்.
* தன்னை விட பலவீனமானவனுக்கு அநியாயம் செய்தால் தப்பில்லை என்று ஒருவன் நினைக்கும் வரை கலியுகம் இருக்கும்.
* மனிதனுக்குப் பகை வெளியுலகத்தில் இல்லை. பயம் என்னும் பெயரில் மனதிற்குள்ளேயே இருக்கிறது.
* தெய்வமே துணை என்று இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் கடமையாற்றுவதில் கண்ணாக இருப்பர்.
- பாரதியார்